காட்டுப்புலம் மாதகல் வீதி புனரமைப்பு…!

0 comments
2014-வலி மேற்கு பிரதேசத்தில் பல இலட்சங்கள் செலவில் வீதிகள் வலி மேற்கு பிரதேச சபையால் புனரமைக்கப்படுகின்றது. மிக நீண்ட யுத்தத்தின் பின் வலி மேற்கு பிரதேசத்தில் மக்கள் மீளக் குடியமர்ந்த பகுதிகளில் காட்ப்புலம் பிரதேசமும் ஒன்றாகும்…

இப் பிரதேசத்தில் வீதிகள் மற்றும் மதவுகள் அமைக்கும் பணியில் வலி மேற்கு பிரதேச சபை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்த வகையில் மேற்படி வீதி மாகாண சபை நிதி மூலம் 6.5 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்டு வருவது குறிப்பிடக்கூடிய ஒன்றாகும்.
இதேவேளை இப் பகுதி மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இலவசமான முறையில் குடிநீர் விநியோகம் வலி மேற்கு பிரதேச சபையால் மேற்கொள்ளப்படுவதும் குறிப்பிக்கூடிய ஒன்றாகும்.








Aucun commentaire:

Enregistrer un commentaire