
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மாதகலை, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும், வவுனியா நெளுக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து செல்வரட்ணம் அவர்கள் 19-12-2018 புதன்கிழமை அன்று வவுனியாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வைரமுத்து லட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் பாசமிகு கணவரும்,
பாஸ்கரன்(நெளுக்குளம்), காலஞ்சென்ற செல்வரஞ்சினி, கலைவாணி(தமிழ்நதி- கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சரஸ்வதியம்மாள், பரமேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கமலேஸ்வரி(பாவற்குளம்), பொன்னுத்துரை(மூதூர்), இராஜகுமாரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற துரைராஜா, துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செந்தூரன், மயூரன், அரவிந்தன், பிரதீபா, அருணி, யுகப்பிரியா, உமாசுதன், உமாப்பிரகாஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
வேனிலவன், பகீரதி, இலக்கியன், காருண்யா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-12-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 03:00 மணியளவில் நெளுக்குளம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
