உலகம் எங்கும் வாழும் எம் மாதகல் உறவுகள் தைப்பொங்கல் தினத்தன்று சூரியனை வழிபட்டு, பொங்கல் பொங்கி உழவர் திருநாளை சிறப்பாகக் கொண்டாடினர்..!
(15.01.2019) அன்று தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
எம் ஊர் ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள் உற்சாகத்துடன் பங்குபற்றினர்.