புலம்பெயர் தேசத்தில் இயங்கும் மாதகல் நலன்புரி அமைப்புக்களின் உதவியுடன் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு வி.சிற்றம்பலம் அவர்களினால் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் அலுவலகத்திற்கென கொள்வனவு செய்த காணியின் ஒரு பகுதியை சுகாதார திணைக்களத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வழங்கப்பட்டது. இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தின் வேண்டுதலுக்கு அமைய, பிரதேச சபை உறுப்பினர் திரு வி.சுப்பிரமணியம்,சங்கங்களின் நிறுவுனர் திரு வீரசுப்பிரமணியம் ஆகியோரின் தொடர்ச்சியான கோரிக்கைக்கு அமைய, கௌரவ மாவை சேனாதிராஜா அவர்களின் சிபாரிசின் மூலம், தேசிய ஒருங்கினைப்பு நல்லிணக்க அமைச்சின் ஊடாக, யாழ் அரசாங்க அதிபரினால் இக் "கிராமிய சுகாதார நிலையம்" கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
Inscription à :
Publier les commentaires (Atom)













































