யாழில் கடற்படையினரின் பாவனைக்கு கையளிக்கப்பட்ட பாடசாலை..!

0 comments
இந்தியாவிலிருந்து கடற்பரப்பு ஊடாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு மேலதிக படையினரை தங்க வைப்பதற்கு கடற்படையினரால் கோரப்பட்டதற்கு அமைய மாதகல் நுணசை வித்தியாலயம் வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.



மாதகல் நுணசை வித்தியாலயத்துக்கு இன்று புதன்கிழமை கடற்படையினர் அழைத்துவரப்பட்டனர். அதனால் பாடசாலையைச் சூழவுள்ள பகுதியில் வசிக்கும் மக்களிடையே பதற்ற நிலை ஏற்பட்டது.

கொரோனா வைரஸ் தொடர்பான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படப்போவதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டனர்.

மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள பாடசாலையில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படுவது தடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பில் சம்பவ இடத்துக்குச் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ், தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து கடற்பரப்புகள் ஊடாக யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு மேலதிக துருப்புக்களைத் தங்க வைப்பதற்கு கடற்படையினரால் கோரப்பட்டதற்கு அமைய மாதகல் நுணசை வித்தியாலயம் வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் மாதகலில் ஒரு பாடசாலையும் இவ்வாறு விமானப்படை மற்றும் கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிசி இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.





 கடல் வழியான போதைப்பொருள் கடத்தலைக் கண்காணிக்க மாதகல் பாடசாலையில் தற்காலிக கடற்படை முகாம்; பிரதேச மக்கள் குழப்பம்..!

இந்தியாவிலிருந்து கடற்பரப்புகள் ஊடாக யாழ்ப்பாணக் குடாநாட்டு போதைப்போருள்கள் கடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு மேலதிக துருப்புக்களைத் தங்க வைப்பதற்கு கடற்படையினரால் கோரப்பட்டதற்கு அமைய மாதகல் நுணசை வித்தியாலயம் வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


மாதகல் நுணசை வித்தியாலயத்துக்கு இன்று புதன்கிழமை கடற்படையினர் அழைத்துவரப்பட்டனர். அதனால் பாடசாலையைச் சூழவுள்ள மக்கள் மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டது.

கோரோனா வைரஸ் தொடர்பான தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படப்போவதாக அந்தப் பகுதி மக்கள் அச்சம் வெளியிட்டனர். மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் அமைந்துள்ள பாடசாலையில் தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்கப்படுவது தடுக்கப்படவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதுதொடர்பில் சம்பவ இடத்துக்குச் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ், தனிமைப்படுத்தல் நிலையம் அமைக்க அனுமதிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.



இந்த நிலையில் இந்தியாவிலிருந்து கடற்பரப்புகள் ஊடாக யாழ்ப்பாணக் குடாநாட்டு போதைப்போருள்கள் கடத்தப்படுவதைக் கண்காணிப்பதற்கு மேலதிக துருப்புக்களைத் தங்க வைப்பதற்கு கடற்படையினரால் கோரப்பட்டதற்கு அமைய மாதகல் நுணசை வித்தியாலயம் வழங்கப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு பாடசாலைகளும் மாதகலில் ஒரு பாடசாலையும் இவ்வாறு விமானப் படை மற்றும் கடற்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


முதல்வன் செய்திகள் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன.

Aucun commentaire:

Enregistrer un commentaire