இலங்கையில் எந்தக் கோவில்களிலும் இல்லாத அளவில் சிறப்பு மிக்க செதுக்கல் வேலைப்பாடுகளுடன், மாதகல் நுணைசை முருகின் கோவிலில் அமைந்திருக்கும் 300 ஆண்டுகால பழைமை வாய்ந்த தேரை, வானத்திலிருந்து இறங்கி வந்த தேவர்களே செய்தார்கள். பின்னர் அவர்கள் சிட்டுக்குருவிகளாக பறந்து சென்று மறைந்து போனார்கள்.....
இது கதையல்ல, நிஜம்! இது எங்கள் ஊரின் பாரம்பரிய நம்பிக்கை..!!
ஐவகை நிலங்களில் நெய்தலும் மருதம் சூழ அமையப்பெற்றிருக்கும் மாதகல் பெரும் கிராமத்தில் தேவர்களே வந்து செதுக்கிய தேர் பற்றிய கதையை நீங்களும் அறிய வேண்டுமா!
வாழ்த்துக்கள் #Sivarathan_sivarajah
உங்கள் பணி தொடரட்டும்.
தமிழரின் பெருமையும் பாரம்பரியமும் வரலாறுகளும் காக்கப்படட்டும்
#மாதகல் #எங்கஊரு #மாதகலான் (Albert Suky)
Mathagal Fish Market🇱🇰🍤🌊 | மாதகல் மீன்பிடிக்கிராமம்
மீன் பிடிக்கிராமம் மாதகலில் காலைநேரம் கரை திரும்பும் படகுகள்.உடன் மீன்களை உடனுக்குடன் உருசித்திட நீங்கள் நாடக்கூடிய சிறந்த இடம்.தரமான மீன்களை மலிவான விலையில் பெற்றிடலாம் யாழ்ப்பாணத்திலிருந்து 16km தொலைவில் காணப்படும் மீன்பிடிக் கிராமமே மாதகல் ஆகும்.இது கடல் சூழ்ந்த அழகான வனப்பு மிக்க சூழலில் அமைந்துள்ளது.போர்க்கால சூழ் நிலையால் மிகவும் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்ட சூழலில் இன்று புதுப்பொலிவுடன் விளங்குகின்றது.ஜம்புகோளப்பட்டினம்,ஜம்ப்புநாதேஸ்வரர் என புகழ்பெற்ற பல விடயங்களை தன்னகத்தே கொண்டுள்ள மாதகல், மீன்பிடியில் சிறந்துவிளங்குகின்றது. 500 இற்கும் மேற்படட விசைப் படகுகளில் மீன் பிடிக்கப்படுகின்றது.இவை உடன் மீன்கள் என்பதால் நல்ல தரமானவையாகவும் சுவையானவையாகவும் காணப்படுகின்றன. பாரை,விளை,கொடுவால்,சுறா,கணவாய்,நண்டு, சீலா என எண்ணற்ற மீனினங்கள் காணப்படுகின்றன.காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை படகுகளில் வாவி வீடுகளிலும் மீன்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.இவ்வாறான குறுகிய நேரேத்தினுள்ளேயே மீன்கள் யாவும் முடிவடைந்துவிடும்.இதனை தனி நபர்கள் மலிவான விலையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.மோட்டார் வாகனங்களில் சிறிய வடி வாகனங்களில் மொத்த வியாபாரிகள் இதனைப் பெற்றுக் கொள்கின்றனர். இது தவிர அருகிலுள்ள மீன் சந்தையிலும் இம் மீன்கள் வியாபாரிகளால் வாங்கப்பட்டு கூறுகளாக ஏல விற்பனை செய்யப்படுகின்றது.
கரைச் சுழலை மீன்வாசனையுடன் அனுபவித்துத்தான் பாருங்களேன்.
Charal Tamizhi நன்றி