பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்கத்தின், "இந்திரகுமார் தமிழ் மொழிக் கல்விக்கூடத்தினால்" ஞாயிறு 17-10-2021 காலை 10மணி முதல் மாலை 1மணி வரை நவராத்திரி விழா Salle Sisley de la maison Jean Witold, Avenue De Saint-germain, PARC JEAN WITOLD, Marly-le-Roi 78160, FRANCE எனும் விலாசத்தில் பாடசாலையின் பொறுப்பாளர் திருமதி யோகராசா லதா அவர்களின் ஒழுங்கமைப்பில் நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் « பஞ்சபுராணம் ஓதுதல் » போட்டியில் [தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம், திருப்புகழ்] பங்குபற்றி வெற்றியடைந்தவர்களிற்கும், பங்கு பற்றியவர்களிற்கும் தகுந்த பரிசில்கள் வைஸ்ணவி கடையினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நவராத்திரி விழா நிகழ்வின் பதிவுகள் சில..
பிரான்ஸ் வாழ் மாதகல் மக்களிற்கு முக்கிய அறிவித்தல் :
இந்திரகுமார் தமிழ்மொழிக் கல்விக் கூடத்தினால் நவராத்திரி தின விழாவை ஞாயிறு 17-10-2021 அன்று காலை 10 மணியளவில் Salle Sisley de la maison Jean Witold, Avenue De Saint-germain, PARC JEAN WITOLD, Marly-le-Roi 78160 எனும் விலாசத்தில் நடாத்த உள்ளோம்.
இந்த நிகழ்வில் « பஞ்சபுராணம் ஓதுதல் » போட்டி நடைபெறும். [தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம், திருப்புகழ்] இந்நிகழ்வில் பங்குபற்றி வெற்றி கொள்பவர்களிற்கு தகுந்த பரிசில்கள் வழங்கப்படும்.
போட்டியில் பாட வேண்டிய பஞ்சபுராணப் பாடல்கள் ஒழுங்கு முறையில் :