திரு.செ.அ. இராஜநாயகம்

0 comments
 
 திரு செபஸ்தியாம்பிள்ளை அன்டனிப்பிள்ளை இராஜநாயகம்

(இளைப்பாறிய அதிபர்)
அன்னை மடியில் : 1 நவம்பர் 1922 — ஆண்டவன் அடியில் : 26 யூன் 2018

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட செபஸ்தியாம்பிள்ளை அன்டனிப்பிள்ளை இராஜநாயகம் அவர்கள் 26-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தொம்மைப்பிள்ளை செபஸ்தியாம்பிள்ளை, மரிசலீனம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற S.R. பீட்டர், அன்னபூரணம்(அரியேற்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜொசப்பின் டியோனீசியா(பேபி) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜன்(நெதர்லாந்து), சீலன்(Brunei), டெனா(லண்டன்), ஜயன்(அவுஸ்திரேலியா), சாந்தா(நோர்வே), ரூபஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பெனடிக்ற்ரம்மா(செல்லபாக்கியம்), மரியநாயகம்(ஆரோக்கியசாமி), இம்மனுவல்(பொன்ராசா), அருளப்பு, தோமஸ்(செல்வரத்தினம்), ஜேம்ஸ் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பற்றிக், சிசிலியா(மணி), கிறிஸ்டின் மற்றும் பிறிம், கிளரன்ஸ்(ஜெயம்), தேவா, ரெஜினா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிக்கோலட்(நெதர்லாந்து), நிலானி(Brunei), ரூபன்(லண்டன்), றச்சனா(அவுஸ்திரேலியா), சதீஸ்(நோர்வே), சங்கீதா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரொஷேல், டொனேல், வெனஷ்கா, ஷோன்டெல், நிக்ரயன், டயன், திரேசாலினி, ஜொனெலா, நோஆ, நத்தானியேல், ஆருஷி, நித்தியன், நிவித்தன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-06-2018 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பி.ப 03.30 மணியளவில் குடாப்பாடு செபமாலை மாதா ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கடற்கரைத்தெரு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
19/2, துஷாரமாவத்தை,
நீர்கொழும்பு.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ராஜன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94766965180
ஜயன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94713644410


Aucun commentaire:

Enregistrer un commentaire