5 ஆவது கட்டம் :
டென்மார்க் மாதகல் நலன்புரிச் சங்கத்தின் நிதி உதவியுடன், நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சூழ்நிலையை அடுத்து (Cronovirus நோய் + கால வரையறை அற்ற ஊரடங்கு உத்தரவு) மாதகல் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு 5 ஆம் கட்டமாக இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கத்தால் j/150, j/151, j/152 ஆகிய கிராம சேவையாளர்களினால் எமக்கு வழங்கப்பட்ட பெயர் பட்டியல் மூலமும்,மற்றும் எம்மால் தெரிவு செய்யப்பட்ட சில குடும்பங்கள் உட்பட 120ற்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு சிறு அளவிலான அத்தியாவசிய சாமான்களை அவரவர் வீடுகளுக்குச் சென்று திங்கட்கிழமை 06-04-2020 அன்று வழங்கி வைக்கப்பட்டன. மற்றும் எமக்கு பொருட்கள் கொள்வனவு செய்து, பொதி செய்து, மக்களுக்கு வழங்கி வைக்க பல வழிகளிலும் உதவி புரிந்த இலங்கை மாதகல் நலன்புரிச் சங்க உறுப்பினர்களுக்கும், பிரான்ஸ் மாதகல் நலன்புரிச் சங்க செயலாளரிற்கும், கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியத்தின் தலைவர், மற்றும் மயூரதாஸ், கோகில்ராஜ், குகந்தன், கௌரி, கஜானன், பராபரன், திருக்குமார், சுபாஸ் ஆகியோருக்கும் இலங்கை மாதகல் நலன்புரிச் சங்கம் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.




