திரு சின்னைய்யா வேலாயுதம் (கந்தசாமி)

0 comments




யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னைய்யா வேலாயுதம் அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டி கிரியை 01-09-2021 புதன்கிழமை அன்று நடைபெற்றது.

இங்ஙனம்,குடும்பத்தினர்



 

யாழ். கரவெட்டி துன்னாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், மாதகல் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னைய்யா வேலாயுதம் அவர்கள் 04-08-2021 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னைய்யா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

புகனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

இந்திராணி, சற்குணராணி, கஜேந்திரராணி, ஆனந்தரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

செல்லையா, கணபதிப்பிள்ளை, வேலுப்பிள்ளை, பொன்னம்மா, செல்லம்மா, சின்னப்பிள்ளை(பூமி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அருள்மோகன், வாணிதாசன், குகதாசன், அனுசுயா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஷர்மினி மார்க் , அஞ்சலிக்கா துஷ்யந்தன், அனோஜன், சிவானி பென்னுவா, மிதுன், சரண், அபிராமி ஆதித்யன், அஷ்மிதா, ஆரண்யன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தியானா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

 
ஆனந்தரூபன் - மகன்
 
சற்குணராணி(பேபி) - மகள்
 
இந்திராணி(ஜெயந்தி) - மகள்
 
கஜேந்திரராணி(வசந்தி) - மகள்

Aucun commentaire:

Enregistrer un commentaire