03.10.2021 தேசிய ரீதியில் நடைபெற்ற பசுமை விருதுகள் சூழல் பொது அறிவுப் பரீட்சையில் யா/மாதகல் சென்யோசப் மகாவித்தியாலய மாணவர்களாகிய செல்வன் இ.அன்ரனி லக் ஷன், செல்வன் த. ஹரிகரன் ஆகியோர் பசுமை அமைதி எனும் தேசியமட்ட போட்டியில் பங்குபற்றி விருதினைப் பெற்றுள்ளனர். பாடஆசிரியை திருமதி சு.சுரேஷியா மற்றும் பாடசாலை அதிபர், பிரதி அதிபர் ஆகியோருடன் விருது பெற்ற மாணவர்கள்.
இம் மாணவர்களை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தி நிற்கின்றனர்.
இவர்களுடன் மாதகல் மக்கள் சார்பாக நாமும் பாராட்டி வாழ்த்துகின்றோம்.