பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,
மாதகல் அந்தோனியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிறீஸ்கந்தரரசா 01.10.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று அதிகாலை காலமானார்.
அன்னார் சின்னத்துரை தங்கரத்தினத்தின் அன்பு மகனும், பரமசாமி சிவஞானவதியின் அன்பு மருமகனும், சிறிதேவியின் அன்பு கணவரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் (01.10.2023) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 14.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைக்காக மாதகல் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்