மாதகல் அன்புக் கன்னியர்கள் இல்லத் தலைவி அருட்சகோதரி R. யோகராணி அவர்களின் அர்ப்பணத்தின் 25ஆவது (வெள்ளிவிழா) ஆண்டு நிறைவு விழாவினை..!

0 comments
 31.05.2023 (புதன்கிழமை) அன்று மாதகல் பங்குத்தந்தை வண றோய்பேடினன் மற்றும் அருட்தந்தையர்கள், மற்றும் மாதகல் பங்கின் அருட்சகோதரி மேரிறோஸ் ஆகியோர்களுடன் இணைந்து பங்கின் பக்திச் சபைகள், பங்குமக்களென அனைவரும் கேக்வெட்டி கொண்டாடி மகிழ்ந்த தருணம்...
மாதகல் பங்கின் அன்புக் கன்னியர் இல்லத் தலைவி அருட்சகோதரி R. யோகராணி அவர்களின் அர்ப்பணத்தின் 25ஆவது (வெள்ளிவிழா) ஆண்டு நிறைவைக் காணும் இந்நன்னாளில் இறைவன் தங்களுக்கு அளித்த சகல நன்மைகளுக்கெல்லாம் நன்றி கூறுவதோடு, தொடர்ந்தும் தங்கள் பணி சிறக்கவும், எம் கிராமத்திற்கு தங்களது சேவை தொடர்ந்து கிடைக்கவும்,தொடர்ந்தும் நலமுடன் வாழ இறையாசீர் என்றும் உங்களுடன் தங்கவும் இறைவனிடம் வேண்டி வாழ்த்தி நிற்கின்றோம்.













 

Aucun commentaire:

Enregistrer un commentaire